கோவையில் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்

கோவையில் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் சு. முத்துசாமி தொடங்கி வைத்தார். மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக ஆறு மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்களுக்கு நெகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 6) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் சு. முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உடனிருந்தார்.

இந்த பிரச்சார வாகனங்கள் "பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு" என்ற நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, "பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை உபயோகப்படுத்துவோம்" என்ற முழக்கத்துடன் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.



இந்த பிரச்சார வாகனங்களில் சிறப்பு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பொதுமக்களுக்கு நெகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாசு கட்டுப்பாட்டை மேலும் வலியுறுத்தும் வகையில், இந்த பிரச்சார வாகனங்கள் அனைத்தும் முழுவதும் மின்சார வாகனங்களாக உள்ளன.

பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு பதிலாக காகிதம் மற்றும் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பிரச்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...