பொள்ளாச்சி அருகே வடுகபாளையம் ரயில்வே கேட் மீண்டும் திறப்பு: மகிழ்ச்சியில் பொதுமக்கள்

பொள்ளாச்சி அருகே வடுகபாளையம் ரயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டது. 16 கிராமங்களின் போக்குவரத்து சீரடைந்தது. பொதுமக்கள் மற்றும் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி கொண்டாடினர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் ரயில்வே கேட் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதால், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் கடந்த ஆட்சியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. அப்போது மாற்று பாதை இல்லாததால் மக்கள் வடுகபாளையம் ரயில்வே கேட் வழியாக சென்று வந்தனர். ஆனால், கடந்த ஐந்தாம் தேதி ரயில்வே நிர்வாகம் இந்த கேட்டை மூடியது. இதனால் அவ்வழியே உள்ள 16 கிராமங்களின் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது.

குறிப்பாக முத்தூர், தாளக்கரை, நலிக்கவுண்டம்பாளையம் போன்ற கிராமங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். இரண்டு கிலோமீட்டர் சுற்றி தங்களது கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்லும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமியிடம் ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து, ரயில்வே கேட்டை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து, ரயில்வே துறை ரயில்வே கேட்டை திறக்க முடிவு எடுத்தது.



இதனால் மகிழ்ச்சியடைந்த பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...