பொள்ளாச்சி அருகே வடுகபாளையம் ரயில்வே கேட் மீண்டும் திறப்பு: மகிழ்ச்சியில் பொதுமக்கள்

பொள்ளாச்சி அருகே வடுகபாளையம் ரயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டது. 16 கிராமங்களின் போக்குவரத்து சீரடைந்தது. பொதுமக்கள் மற்றும் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி கொண்டாடினர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் ரயில்வே கேட் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதால், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் கடந்த ஆட்சியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. அப்போது மாற்று பாதை இல்லாததால் மக்கள் வடுகபாளையம் ரயில்வே கேட் வழியாக சென்று வந்தனர். ஆனால், கடந்த ஐந்தாம் தேதி ரயில்வே நிர்வாகம் இந்த கேட்டை மூடியது. இதனால் அவ்வழியே உள்ள 16 கிராமங்களின் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது.

குறிப்பாக முத்தூர், தாளக்கரை, நலிக்கவுண்டம்பாளையம் போன்ற கிராமங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். இரண்டு கிலோமீட்டர் சுற்றி தங்களது கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்லும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமியிடம் ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து, ரயில்வே கேட்டை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து, ரயில்வே துறை ரயில்வே கேட்டை திறக்க முடிவு எடுத்தது.



இதனால் மகிழ்ச்சியடைந்த பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...