பாரத் நெட் திட்டத்திற்கு எதிர்ப்பு: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவையில் 228 ஊராட்சிகளில் 191 ஊராட்சிகளில் பாரத் நெட் திட்டம் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது. திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 191 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த பாரத் நெட் திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை கேபிள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களின் வழியாக கண்ணாடி இழை கேபிள் கொண்டு செல்ல கூடாது என இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "இந்த திட்டம் முழுமையாக அரசின் திட்டமாகும். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின் கம்பங்கள் வழியாக கண்ணாடி இழை கேபிள் கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்ய கூடாது" என்றார்.

மேலும், விளைநிலங்கள் உள்ள மின் கம்பங்களின் வழியாக கண்ணாடி இழை கேபிள்கள் கொண்டு செல்லப்படும் போது பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், கண்ணாடி இழையில் எவ்விதமான உலோக பொருட்களும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

"இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். எனவே இந்த திட்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள், கண்ணாடி இழை கேபிள்களை கொண்டு செல்ல தடை விதிக்கும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...