பொள்ளாச்சியில் வாகனம் ஸ்டார்ட் செய்ய மறுத்ததால் இளைஞர் கொலை - இருவர் கைது

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் வாகனம் ஸ்டார்ட் செய்ய மறுத்ததால் 21 வயது இளைஞர் அரவிந்த்சாமி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள ஓம் பிரகாஷ் தியேட்டர் அருகே உடலில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார், உடலை மீட்டு பரிசோதனை செய்தனர். உடலில் காயங்களும் கத்திக்குத்து காயங்களும் இருந்தது தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் பொள்ளாச்சி ஜே ஜே நகரைச் சேர்ந்த 21 வயதான அரவிந்த்சாமி என்பதும், அவர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. அரவிந்த்சாமிக்கு திருமணமாகி மனைவி மற்றும் நான்கு மாத பெண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சூலேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பைசல் மற்றும் மோதிராபுரம் பகுதியைச் சேர்ந்த விமல் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் பொள்ளாச்சி பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், அவர்களது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் வால்பாறை சாலையில் தள்ளிச் சென்றதாகவும், அப்போது வந்த அரவிந்தை நிறுத்தி வாகனத்தை ஸ்டார்ட் செய்து தருமாறு கேட்டதாகவும் தெரியவந்தது. ஆனால் அரவிந்த் அதற்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்து கிளம்ப முயன்றபோது, விமல் மற்றும் பைசல் இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கி கத்தியால் குத்தியதில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...