கோவை மாவட்ட ஆட்சியர் கணியூர் ஊராட்சிக்கு சர்வதேச தர சான்றிதழ் வழங்கினார்

கோவை மாவட்டத்தில் சூலூர் ஒன்றியத்தின் கணியூர் ஊராட்சி சிறந்த செயல்பாட்டிற்காக ISO சான்றிதழ் பெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இந்த சான்றிதழை ஊராட்சி தலைவரிடம் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (05.08.2024) ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது. அடிப்படை தேவைகளை சிறப்பாக கையாளும் உள்ளாட்சி அமைப்புகளில், சூலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கணியூர் ஊராட்சி மாநில அளவில் 4-வது ஊராட்சியாகவும், மாவட்டத்தில் முதல் ஊராட்சியாகவும் தேர்வு செய்யப்பட்டது.

இதற்காக சர்வதேச தரச்சான்று சம்மேளனத்தால் வழங்கப்பட்ட சர்வதேச தர சான்றிதழை (ISO) கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமியிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், கணியூர் ஊராட்சி துணைத் தலைவர் ராஜு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துராஜு, ஹேமலதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கள சக்தியா, ஊராட்சி செயலர் ஜெகதீசன் மற்றும் பல பணியாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...