கோவை மாவட்ட ஆட்சியர் கணியூர் ஊராட்சிக்கு சர்வதேச தர சான்றிதழ் வழங்கினார்

கோவை மாவட்டத்தில் சூலூர் ஒன்றியத்தின் கணியூர் ஊராட்சி சிறந்த செயல்பாட்டிற்காக ISO சான்றிதழ் பெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இந்த சான்றிதழை ஊராட்சி தலைவரிடம் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (05.08.2024) ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது. அடிப்படை தேவைகளை சிறப்பாக கையாளும் உள்ளாட்சி அமைப்புகளில், சூலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கணியூர் ஊராட்சி மாநில அளவில் 4-வது ஊராட்சியாகவும், மாவட்டத்தில் முதல் ஊராட்சியாகவும் தேர்வு செய்யப்பட்டது.

இதற்காக சர்வதேச தரச்சான்று சம்மேளனத்தால் வழங்கப்பட்ட சர்வதேச தர சான்றிதழை (ISO) கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமியிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், கணியூர் ஊராட்சி துணைத் தலைவர் ராஜு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துராஜு, ஹேமலதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கள சக்தியா, ஊராட்சி செயலர் ஜெகதீசன் மற்றும் பல பணியாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...