உடுமலை ஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் கேரள நிவாரண நிதிக்கு ரூ.50,000 உதவி

உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணைப் பதிவாளர் கிருஷ்ணன், வயநாடு மண்சரிவு பாதிப்புக்கு உதவும் வகையில் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50,000 அனுப்பி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணைப் பதிவாளர் கிருஷ்ணன், வயநாடு மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50,000 அனுப்பி வைத்துள்ளார்.

வயநாடு மண்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், கேரள முதல்வர் அனைவரும் நிதி உதவி வழங்க வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், உடுமலையில் முதல் நபராக கிருஷ்ணன் தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.50,000 ரூபாயை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.



கிருஷ்ணன் ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசுக்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும், தனது மனைவியின் நினைவாக பத்தாண்டுகளுக்கு மேலாக, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

இவரது தொடர்ந்த சமூக சேவை மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை பாராட்டுக்குரியது என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...