கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஹரீஸிடம் பர்ஸை ஒப்படைத்து மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Coimbatore: கோவையில் சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மாணவியின் நேர்மையான செயலுக்கு போலீசார் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளனர்.




கோவை தாமஸ் வீதியை சேர்ந்தவர் மணீஷ் (45). இவரது மகள் ஜான்வி (9) புலியகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.




நேற்று மார்ச் 23ம் தேதி மதியம் மணீஷ் தனது மகள் ஜான்வியுடன் வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் தேர்வீதி அருகே சென்றபோது, சாலையில் ஒரு மணி பர்ஸ் கிடந்ததை மாணவி ஜான்வி கண்டெடுத்தார்.




ஜான்வி அந்த பர்ஸை திறந்து பார்த்தபோது, உள்ளே ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவை இருந்தன. உடனே ஜான்வி தனது தந்தையுடன் கடை வீதி காவல் நிலையத்திற்கு சென்று கீழே கண்டெடுத்த பணம் அடங்கிய பர்ஸை இன்ஸ்பெக்டர் சங்கரிடம் ஒப்படைத்தார்.




பின்னர் போலீசார், மணி பர்ஸில் இருந்த ஆதார் அட்டையில் உள்ள முகவரியை வைத்து மணி பர்ஸை தவறவிட்ட நபரை கண்டறிந்தனர். அவர் பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஹரீஸ் (33) என்பது தெரியவந்தது. போலீசார் நேற்று அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.




காவல் நிலையத்தில் மாணவி ஜான்வி மணி பர்ஸை அதன் உரியவர் ஹரீஸிடம் நேரடியாக ஒப்படைத்தார். மாணவியின் இந்த நேர்மையான செயலைப் பாராட்டி இன்ஸ்பெக்டர் சங்கர் ஜான்விக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். தனது பணத்தையும் முக்கியமான ஆவணங்களையும் மீட்டெடுத்த ஹரீஸ் மாணவிக்கு நன்றி தெரிவித்தார்.




இளம் வயதிலேயே நேர்மையையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்திய ஜான்வியின் செயல் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. இது போன்ற நேர்மையான செயல்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக அமையும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...