உடுமலை ஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் கேரள நிவாரண நிதிக்கு ரூ.50,000 உதவி

உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணைப் பதிவாளர் கிருஷ்ணன், வயநாடு மண்சரிவு பாதிப்புக்கு உதவும் வகையில் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50,000 அனுப்பி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணைப் பதிவாளர் கிருஷ்ணன், வயநாடு மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50,000 அனுப்பி வைத்துள்ளார்.

வயநாடு மண்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், கேரள முதல்வர் அனைவரும் நிதி உதவி வழங்க வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், உடுமலையில் முதல் நபராக கிருஷ்ணன் தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.50,000 ரூபாயை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.



கிருஷ்ணன் ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசுக்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும், தனது மனைவியின் நினைவாக பத்தாண்டுகளுக்கு மேலாக, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

இவரது தொடர்ந்த சமூக சேவை மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை பாராட்டுக்குரியது என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...