உடுமலை ஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் கேரள நிவாரண நிதிக்கு ரூ.50,000 உதவி

உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணைப் பதிவாளர் கிருஷ்ணன், வயநாடு மண்சரிவு பாதிப்புக்கு உதவும் வகையில் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50,000 அனுப்பி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணைப் பதிவாளர் கிருஷ்ணன், வயநாடு மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50,000 அனுப்பி வைத்துள்ளார்.

வயநாடு மண்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், கேரள முதல்வர் அனைவரும் நிதி உதவி வழங்க வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், உடுமலையில் முதல் நபராக கிருஷ்ணன் தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.50,000 ரூபாயை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.



கிருஷ்ணன் ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசுக்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும், தனது மனைவியின் நினைவாக பத்தாண்டுகளுக்கு மேலாக, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

இவரது தொடர்ந்த சமூக சேவை மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை பாராட்டுக்குரியது என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...