தீரன் சின்னமலை நினைவு நாள்: கோவை மற்றும் பொள்ளாச்சியில் எம்எல்ஏக்கள் மரியாதை

தீரன் சின்னமலையின் 219வது நினைவு நாளையொட்டி, கோவையில் கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏவும், பொள்ளாச்சியில் வி.ஜெயராமன் எம்எல்ஏவும் மரியாதை செலுத்தினர். வேளாளர் சன்மார்க்க சங்கம் மற்றும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.


Coimbatore: தீரன் சின்னமலையின் 219வது நினைவு நாளை முன்னிட்டு கோவை மற்றும் பொள்ளாச்சியில் அவரது திருவுருவப் படத்திற்கு எம்எல்ஏக்கள் மரியாதை செலுத்தினர்.

கோவை பீளமேடு வேளாளர் சன்மார்க்க சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் பீளமேடு துரைசாமி, வேளாளர் சன்மார்க்க சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



இதேபோல், பொள்ளாச்சி எம்எல்ஏ அலுவலகத்திலும் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார், செந்தில்குமார், ஜேம்ஸ்ராஜா, சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் தியாகம் மற்றும் வீரம் நினைவுகூரப்பட்டது. அவரது வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்களையும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான அவரது துணிச்சலான எதிர்ப்பையும் பங்கேற்பாளர்கள் நினைவுகூர்ந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...