தாராபுரத்தில் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிப்பு

தாராபுரம் முகாம் அலுவலகத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அமைச்சரும் கட்சி நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கினார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.



இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியக்குழு பெருந்தலைவருமான S.V. செந்தில்குமார், தாராபுரம் நகர திமுக செயலாளர் சு. முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் கு. பாப்புக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இந்நாள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் வார்டு திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...