ஆடிப்பெருக்கு: அமராவதி அணையில் படகு சவாரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு படகு சவாரி மீண்டும் துவங்கியது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு சாதனங்களுடன் படகு சவாரியில் உற்சாகமாக பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் ஆடிப்பெருக்கு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு படகு சவாரி மீண்டும் துவங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

காமராஜரால் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அமராவதி அணை, ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.



கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், ஆடிப்பெருக்கு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு படகு சவாரி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் இந்த படகு சவாரியில், சுற்றுலா பயணிகள் தகுந்த பாதுகாப்பு சாதனங்களுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். படகு சவாரி மீண்டும் துவங்கியதால் அமராவதி அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...