ஆடிப்பெருக்கு: அமராவதி அணையில் படகு சவாரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு படகு சவாரி மீண்டும் துவங்கியது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு சாதனங்களுடன் படகு சவாரியில் உற்சாகமாக பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் ஆடிப்பெருக்கு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு படகு சவாரி மீண்டும் துவங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

காமராஜரால் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அமராவதி அணை, ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.



கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், ஆடிப்பெருக்கு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு படகு சவாரி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் இந்த படகு சவாரியில், சுற்றுலா பயணிகள் தகுந்த பாதுகாப்பு சாதனங்களுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். படகு சவாரி மீண்டும் துவங்கியதால் அமராவதி அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...