ஆடிப்பெருக்கு: அமராவதி அணையில் படகு சவாரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு படகு சவாரி மீண்டும் துவங்கியது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு சாதனங்களுடன் படகு சவாரியில் உற்சாகமாக பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் ஆடிப்பெருக்கு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு படகு சவாரி மீண்டும் துவங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

காமராஜரால் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அமராவதி அணை, ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.



கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், ஆடிப்பெருக்கு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு படகு சவாரி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் இந்த படகு சவாரியில், சுற்றுலா பயணிகள் தகுந்த பாதுகாப்பு சாதனங்களுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். படகு சவாரி மீண்டும் துவங்கியதால் அமராவதி அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...