முத்துராமலிங்க தேவர் குறித்த அவதூறு: யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

கோவையில், முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரது விடுதலை கேள்விக்குறியாக உள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில், முத்துராமலிங்க தேவர் தொடர்பாக அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாயப்பட்டதால், ஜாமினில் வெளியே வர முடியாமல் இருந்தார்.

பின்னர் உச்சநீதிமன்றம் சென்று சில வழக்குகளுக்கு ஜாமின் பெற்ற சவுக்கு சங்கர், தமிழகத்திலும் ஒவ்வொரு வழக்கிலும் ஜாமின் பெற்று வந்தார். இந்நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15 அன்று யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கோவை மத்திய சிறையில் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறாக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கரை ஆகஸ்ட் 2 அன்று கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார், அவரை சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகள் அனைத்திலும் அவர் ஜாமின் பெற்றால் மட்டுமே வெளியே வர முடியும். அதுவரை அவர் சிறையில் தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...