முத்துராமலிங்க தேவர் குறித்த அவதூறு: யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

கோவையில், முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரது விடுதலை கேள்விக்குறியாக உள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில், முத்துராமலிங்க தேவர் தொடர்பாக அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாயப்பட்டதால், ஜாமினில் வெளியே வர முடியாமல் இருந்தார்.

பின்னர் உச்சநீதிமன்றம் சென்று சில வழக்குகளுக்கு ஜாமின் பெற்ற சவுக்கு சங்கர், தமிழகத்திலும் ஒவ்வொரு வழக்கிலும் ஜாமின் பெற்று வந்தார். இந்நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15 அன்று யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கோவை மத்திய சிறையில் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறாக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கரை ஆகஸ்ட் 2 அன்று கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார், அவரை சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகள் அனைத்திலும் அவர் ஜாமின் பெற்றால் மட்டுமே வெளியே வர முடியும். அதுவரை அவர் சிறையில் தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...