ஆடிப்பெருக்கு: பவானி, ஆழியாறு, நொய்யல் ஆறுகளுக்கு செல்ல வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ஆடிப்பெருக்கு திருநாளையொட்டி, தொடர் மழையால் நீரோட்டம் அதிகரித்துள்ள கோவை மாவட்டத்தின் பவானி, ஆழியாறு, நொய்யல் ஆறுகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வால்பாறை, நீலகிரி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

மழையின் காரணத்தினால் நொய்யல், பவானி உள்ளிட்ட ஆறுகளில் நீரோட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவ்வாறான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நாளை (ஆகஸ்ட் 3) நடைபெறவுள்ள ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு பல்வேறு பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்வது வழக்கம் என்றும் ஆட்சியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால், கோவை மாவட்டத்தில் செல்லும் பவானி, நொய்யல், ஆழியாறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் தங்களது உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...