விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம், கடன் தள்ளுபடி, கள் இறக்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Coimbatore: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழ்நாடு நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு மத்திய அரசு ஆதார விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாநில தலைவர் AS பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மத்திய அரசு ஆதார விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கிக் கடனை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு ஆதார விலை இல்லாததால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். மேலும், விவசாயிகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை என்றும், விவசாயிகள் விவசாய தோட்ட பத்திரங்களை அடமானம் வைத்து விவசாயம் செய்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, மத்திய மாநில அரசுகள் வழங்கிய கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், கடன் பெறும் விவசாயிகளிடம் கடன் தொகையை திருப்பி கேட்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர். மேலும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தின் போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...