விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம், கடன் தள்ளுபடி, கள் இறக்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Coimbatore: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழ்நாடு நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு மத்திய அரசு ஆதார விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாநில தலைவர் AS பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மத்திய அரசு ஆதார விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கிக் கடனை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு ஆதார விலை இல்லாததால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். மேலும், விவசாயிகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை என்றும், விவசாயிகள் விவசாய தோட்ட பத்திரங்களை அடமானம் வைத்து விவசாயம் செய்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, மத்திய மாநில அரசுகள் வழங்கிய கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், கடன் பெறும் விவசாயிகளிடம் கடன் தொகையை திருப்பி கேட்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர். மேலும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தின் போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...