இடிகரை மக்கள் சாலை வசதி கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

இடிகரை பேரூராட்சியில் சாலை வசதி, குடிநீர் பிரச்சினை தீர்வு மற்றும் பாலம் அமைக்க கோரி மக்கள் போராட்டம். காவல்துறை தலையீட்டால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 6 மாதத்தில் தீர்வு காண உத்தரவாதம் அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் இடிகரை பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு மணிகாரம்பாளையம் பகுதி மகாலட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று (ஜூலை 31) பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி, குடிநீர் பிரச்சினை தீர்வு மற்றும் பாலம் அமைத்து தர வேண்டி பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தை அணுகியுள்ளனர். ஆனால், வார்டு கவுன்சிலர் மாரிமுத்து மற்றும் பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் செவி சாய்க்காத காரணத்தினால், பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆறு மாத காலத்திற்குள் அப்பகுதியில் சாலை வசதி மற்றும் பாலம் வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த உத்தரவாதத்தை அடுத்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் இடிகரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...