இடிகரை மக்கள் சாலை வசதி கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

இடிகரை பேரூராட்சியில் சாலை வசதி, குடிநீர் பிரச்சினை தீர்வு மற்றும் பாலம் அமைக்க கோரி மக்கள் போராட்டம். காவல்துறை தலையீட்டால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 6 மாதத்தில் தீர்வு காண உத்தரவாதம் அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் இடிகரை பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு மணிகாரம்பாளையம் பகுதி மகாலட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று (ஜூலை 31) பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி, குடிநீர் பிரச்சினை தீர்வு மற்றும் பாலம் அமைத்து தர வேண்டி பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தை அணுகியுள்ளனர். ஆனால், வார்டு கவுன்சிலர் மாரிமுத்து மற்றும் பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் செவி சாய்க்காத காரணத்தினால், பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆறு மாத காலத்திற்குள் அப்பகுதியில் சாலை வசதி மற்றும் பாலம் வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த உத்தரவாதத்தை அடுத்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் இடிகரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...