இடிகரை மக்கள் சாலை வசதி கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

இடிகரை பேரூராட்சியில் சாலை வசதி, குடிநீர் பிரச்சினை தீர்வு மற்றும் பாலம் அமைக்க கோரி மக்கள் போராட்டம். காவல்துறை தலையீட்டால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 6 மாதத்தில் தீர்வு காண உத்தரவாதம் அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் இடிகரை பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு மணிகாரம்பாளையம் பகுதி மகாலட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று (ஜூலை 31) பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி, குடிநீர் பிரச்சினை தீர்வு மற்றும் பாலம் அமைத்து தர வேண்டி பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தை அணுகியுள்ளனர். ஆனால், வார்டு கவுன்சிலர் மாரிமுத்து மற்றும் பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் செவி சாய்க்காத காரணத்தினால், பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆறு மாத காலத்திற்குள் அப்பகுதியில் சாலை வசதி மற்றும் பாலம் வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த உத்தரவாதத்தை அடுத்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் இடிகரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...