வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு கோவையிலிருந்து டெல்டா குவாட் குழு புறப்பட்டது

கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 25 பேர் கொண்ட டெல்டா குவாட் குழு, நவீன மீட்பு உபகரணங்களுடன் வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு புறப்பட்டது. இந்த குழு 18 பேரிடர்களில் 3,500க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இயங்கி வரும் டெல்டா குவாட் குழு, வயநாடு நிலச்சரிவு பாதிப்பு பகுதிக்கு நவீன மீட்பு உபகரணங்களுடன் புறப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பு பயிற்சி பெற்ற விமானப்படை, கப்பல் படை, தரைப்படை ஆகிய முப்படைகளின் வீரர்கள் அடங்கிய இந்த டெல்டா குவாட் குழுவில் 25 வீரர்கள் உள்ளனர். கமாண்டர் ஈசன் தலைமையிலான இந்த குழு, கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு புறப்பட்டுள்ளது.



வயநாடு, சூரல் மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் மண்ணில் புதைந்திருப்பவர்களை துல்லியமாக கண்டறியும் சிந்தடிக் அப்ரைஸர் ரேடார் கருவியை இந்த குழு எடுத்துச் செல்கிறது. சேட்டிலைட் சிக்னல் மூலம் இயங்கும் இந்த கருவி மூலம் மண்ணில் புதைந்திருப்பவர்களை எளிதில் கண்டறிந்து மீட்க முடியும்.

மேலும், ரப்பர் படகுகள், ரப்பர் டியூப்கள், உயிர் காக்கும் ஜாக்கெட்டுகள், டார்ச் லைட் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் டெல்டா குவாட் குழுவினர் வயநாடு நோக்கி விரைந்துள்ளனர்.

இதுவரை 18 பேரிடர் பேரழிவுகளில் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ள இந்த டெல்டா குவாட் குழு, 3,500க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...