வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு கோவையிலிருந்து டெல்டா குவாட் குழு புறப்பட்டது

கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 25 பேர் கொண்ட டெல்டா குவாட் குழு, நவீன மீட்பு உபகரணங்களுடன் வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு புறப்பட்டது. இந்த குழு 18 பேரிடர்களில் 3,500க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இயங்கி வரும் டெல்டா குவாட் குழு, வயநாடு நிலச்சரிவு பாதிப்பு பகுதிக்கு நவீன மீட்பு உபகரணங்களுடன் புறப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பு பயிற்சி பெற்ற விமானப்படை, கப்பல் படை, தரைப்படை ஆகிய முப்படைகளின் வீரர்கள் அடங்கிய இந்த டெல்டா குவாட் குழுவில் 25 வீரர்கள் உள்ளனர். கமாண்டர் ஈசன் தலைமையிலான இந்த குழு, கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு புறப்பட்டுள்ளது.



வயநாடு, சூரல் மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் மண்ணில் புதைந்திருப்பவர்களை துல்லியமாக கண்டறியும் சிந்தடிக் அப்ரைஸர் ரேடார் கருவியை இந்த குழு எடுத்துச் செல்கிறது. சேட்டிலைட் சிக்னல் மூலம் இயங்கும் இந்த கருவி மூலம் மண்ணில் புதைந்திருப்பவர்களை எளிதில் கண்டறிந்து மீட்க முடியும்.

மேலும், ரப்பர் படகுகள், ரப்பர் டியூப்கள், உயிர் காக்கும் ஜாக்கெட்டுகள், டார்ச் லைட் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் டெல்டா குவாட் குழுவினர் வயநாடு நோக்கி விரைந்துள்ளனர்.

இதுவரை 18 பேரிடர் பேரழிவுகளில் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ள இந்த டெல்டா குவாட் குழு, 3,500க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...