வீட்டு வசதித் துறை கட்டும் குடியிருப்புகள் உறுதித் தன்மையுடன் இருக்கும்: அமைச்சர் முத்துசாமி உறுதி

வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதித் துறை கட்டும் குடியிருப்புகள் உறுதித் தன்மையுடன் இருக்கும் என உறுதியளித்தார்.


Coimbatore: வீட்டு வசதித் துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான முத்துசாமி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். வால்பாறையில் நிலச்சரிவால் வீடு இடிந்து உயிரிழந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது பேத்தி ஜனப்பிரியா குடும்பத்திற்கும், பொள்ளாச்சி திப்பம்பட்டியில் வீடு இடிந்து உயிரிழந்த ஹரிஹரசுதன் குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதித் துறை சார்பில் கட்டப்படும் புதிய குடியிருப்புகள் உறுதித் தன்மையுடன் இருக்கும் என்ற உத்தரவாதத்துடன் ஒப்பந்ததாரர்களிடம் உறுதி பெற்றே பணிகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். அடுக்குமாடி குடியிருப்புகளை முறையாக பராமரித்தால் நீண்ட நாட்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.



திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், 60 இடங்களில் வீட்டு வசதித் துறை சார்பில் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ள மோசமான நிலையில் இருந்த கட்டிடங்களில் 90 சதவீதம் இடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் புதிய குடியிருப்புகள் கட்டி அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...