பொள்ளாச்சியில் கனமழை: வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் பலி

பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயது இளைஞர் மற்றும் அவரது செல்லப்பிராணி உயிரிழந்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திப்பம்பட்டி கிராமத்தின் அண்ணா தெருவில் வசித்து வந்த அன்பழகன் என்பவரின் மகன் ஹரிஹரசுதன் (28) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு தொடர்ந்து பெய்த கனமழையால், ஹரிஹரசுதன் தூங்கிக் கொண்டிருந்த அறையின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஹரிஹரசுதன் மற்றும் அவரது செல்லப்பிராணியான நாய்க்குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்தனர். உடனடியாக ஹரிஹரசுதனின் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலத்தில் பழுதடைந்த கட்டிடங்களில் வசிப்பது ஆபத்து என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...