வால்பாறையில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வால்பாறையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு ஜூலை 30 அன்று விடுமுறை அறிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.

நேற்றிரவு வால்பாறை பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வால்பாறை பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மழை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் மாவட்ட நிர்வாகம், தேவைப்பட்டால் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...