வால்பாறையில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வால்பாறையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு ஜூலை 30 அன்று விடுமுறை அறிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.

நேற்றிரவு வால்பாறை பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வால்பாறை பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மழை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் மாவட்ட நிர்வாகம், தேவைப்பட்டால் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...