கோவை பீளமேட்டில் அரிசி ஆலை அதிபரை கடத்தி தாக்கி கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது

கோவை பீளமேட்டில் அரிசி ஆலை அதிபர் ஜாபர் சாதிக் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் தேடப்படுகின்றனர்.


கோவை: கோவை பீளமேட்டில் அரிசி ஆலை அதிபர் ஜாபர் சாதிக்கை கடத்தி தாக்கி கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் தேடப்படுகின்றனர்.

கோவை உக்கடம் லாரிப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்த ஜாபர் சாதிக் (35) பீளமேட்டில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவருக்கும், அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

ஜூலை 28 அன்று, ஒருவர் ஜாபர் சாதிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் இருந்து வெளியே வருமாறு அழைத்தார். வீட்டு முன்பு நின்றிருந்த இருவர் அரிசி கடத்தல் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டினர். அப்போது மேலும் 5 பேர் காரில் வந்து, ஜாபர் சாதிக்கை தாக்கி காரில் கடத்தி சென்றனர்.

பாலக்காடு சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பின்புறம் காரை நிறுத்தி, ஜாபர் சாதிக்கை நைலான் கயிற்றால் கட்டிப்போட்டு அடித்து உதைத்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ. 23,000 மற்றும் ஒரு செல்போனை பறித்துக் கொண்டனர். அரிசி கடத்தல் சம்பந்தமாக வெளியே சொன்னால் தொலைத்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர்.

இது குறித்து ஜாபர் சாதிக் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த சிக்கந்தர் பாஷா (37), கோவைப்புதூரை சேர்ந்த தவ்பிக் (39), கரும்புக்கடை திப்பு நகரை சேர்ந்த முகமத் அசாருதீன் (35) ஆகிய மூவரை கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஜியா, ஜாகீர், அன்வர், அஜீஸ் ஆகிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...