கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கோரி கவன ஈர்ப்பு போராட்டம்

கோவை உக்கடம் பகுதியில் சிஎம்சி காலனி குடியிருப்புகள் அகற்றப்பட்டு 4 ஆண்டுகளாக தகர கொட்டகையில் வசிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தர கோரி தமிழ் புலிகள் கட்சி தலைமையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகர் உக்கடம் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டி தரக்கோரி கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

உக்கடம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளுக்காக சிஎம்சி காலனி குடியிருப்புகள் அகற்றப்பட்டது. அப்பகுதியில் வசித்த மக்களுக்கு வேறு இடத்தில் தகர கொட்டகை அமைத்து தரப்பட்டது. மேம்பால பணிகள் முடிந்தவுடனேயே அதே இடத்தில் குடியிருப்புகள் கட்டி தரப்படும் என மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்திருந்தது.

ஆனால், மேம்பால பணிகள் நிறைவுற உள்ள நிலையிலும் குடியிருப்புகள் கட்டி தரப்படவில்லை. இதனால் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மக்கள் தகர கொட்டகையிலேயே வசித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பிலும் குடியிருப்புகள் கட்டித்தர தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிஎம்சி காலனியில் தூய்மை பணி புரியும் அருந்ததியர் மக்களின் குடியிருப்புகளை உடனடியாக கட்டி தர வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் உக்கடம் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஜூலை 29 அன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சிந்தனைச் செல்வன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், முன்னாள் கோவை எம்பி பி ஆர் நடராஜன் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக குடியிருப்புகளை கட்டித் தர வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் போது மிதமான மழை பெய்தபோதிலும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது. முன்னதாக இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...