கோவை கவுண்டம்பாளையத்தில் நீதிமன்ற ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் வசித்த 50 வயது நீதிமன்ற ஊழியர் சந்திரசேகர், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காரணம் தெரியவில்லை.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சந்திரசேகர் (50) என்பவர் கோவை 5வது கூடுதல் நீதிமன்றத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வந்தார். நேற்று (ஜூலை 28) அவரது மனைவி பூங்கொடி, மகள் மற்றும் மகனுடன் சுப்பிரமணியம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

வீட்டில் தனியாக இருந்த சந்திரசேகர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரைப் பார்க்க வந்த உறவினர் ஒருவர் இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக சந்திரசேகரின் மனைவி மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சந்திரசேகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரசேகரின் மனைவியும் குழந்தைகளும் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

இச்சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரசேகரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...