உக்கடம் குடிசை மாற்று திட்டம்: 520 வீடுகள் கட்டித்தர கோரி இந்து மக்கள் கட்சி மனு

உக்கடம் சிஎம்சி காலனி பகுதியில் 520 வீடுகள் கட்டித்தர வாக்குறுதி அளித்த குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.


கோவை: உக்கடம் சிஎம்சி காலனி பகுதியில் 520க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தருவதாக குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன், உக்கடம் குளக்கரை அருகிலும் காய்கறி சந்தைக்குப் பின்புறமும் உள்ள வீடுகளை காலி செய்யுமாறு குடிசை மாற்று வாரியம் அப்பகுதி பட்டியல் இன மக்களைக் கேட்டுக்கொண்டது. மேலும், காலி செய்யப்பட்ட இடங்களிலும், தற்போது மீன் சந்தை நடைபெறும் இடத்திலும் 520 பல்லடுக்கு குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஒன்றரை ஆண்டுகள் கழித்து, ஒரு பகுதியில் மட்டும் 222 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆனால், இரண்டாம் கட்டமாக 298 குடியிருப்புகள் கட்டுவதற்கான எந்த வேலையும் தொடங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் சொந்தப் பகுதியிலேயே அகதிகளாக வாழ்கின்றனர்.

வாக்குறுதியின்படி மீன் சந்தை நடைபெறும் இடம் இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை. 18 மாதங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக, பத்திரப்பதிவு செய்யப்பட்ட அப்பகுதியின் பின்புறத்தில் உள்ள அதே பகுதி மக்களின் வீடுகளை மாற்று இடமாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தற்போது கோரியுள்ளனர்.

மீன் சந்தை உள்ள இடத்தில் குடிசை மாற்று குடியிருப்பு கட்ட தமிழக அரசு ஏற்கனவே நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், மீன் சந்தையில் வியாபாரம் செய்யும் பிற வகுப்பினரின் கோரிக்கையால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்கடம் மீன் மார்க்கெட்டை அகற்றி, அப்பகுதி பட்டியலின மக்களுக்கு மீதமுள்ள வீடுகளைத் தர வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இக்கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், அப்பகுதி மக்களைக் கொண்டு பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...