பொள்ளாச்சி நகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் - நகர மன்ற தலைவர் வீடு வீடாக ஆய்வு

பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதி கிருஷ்ணன் குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Coimbatore: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி நகர பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இன்று நகராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார். வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் தேங்கி புழுக்கள் உள்ளதா என்பது குறித்தும், வீடுகளை சுற்றியும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.



நகராட்சி முழுவதும் 80க்கும் மேற்பட்ட டெங்கு தடுப்பு ஊழியர்கள் வீடு வீடாக சென்று டெங்குவை பரப்பும் புழுக்களை மருந்து தெளித்து அழித்து வருவதாகவும், நிலவேம்பு கசாயம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நகரமன்ற தலைவர் தெரிவித்தார். டெங்கு இல்லாத நகரமாக பொள்ளாச்சியை மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது நகர மன்ற உறுப்பினர்கள் நாகராஜ், கவிதா, துரைபாய் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...