பொள்ளாச்சி நகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் - நகர மன்ற தலைவர் வீடு வீடாக ஆய்வு

பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதி கிருஷ்ணன் குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Coimbatore: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி நகர பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இன்று நகராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார். வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் தேங்கி புழுக்கள் உள்ளதா என்பது குறித்தும், வீடுகளை சுற்றியும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.



நகராட்சி முழுவதும் 80க்கும் மேற்பட்ட டெங்கு தடுப்பு ஊழியர்கள் வீடு வீடாக சென்று டெங்குவை பரப்பும் புழுக்களை மருந்து தெளித்து அழித்து வருவதாகவும், நிலவேம்பு கசாயம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நகரமன்ற தலைவர் தெரிவித்தார். டெங்கு இல்லாத நகரமாக பொள்ளாச்சியை மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது நகர மன்ற உறுப்பினர்கள் நாகராஜ், கவிதா, துரைபாய் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...