கோவை மதுக்கரையில் தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்க எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் மனு

கோவை மதுக்கரையில் தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது. குவாரிகள் மீண்டும் இயங்கினால் விவசாய குடும்பங்கள் பாதிப்படையும் என எச்சரிக்கை.


Coimbatore: கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்கும் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி அளித்த மனுவில், மதுக்கரை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 அடி ஆழம் வரை தோண்டி எடுக்கப்பட்ட கல்குவாரிகள் தடைசெய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அவற்றை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.



இந்த கல்குவாரிகள் மீண்டும் இயக்கப்பட்டால், அதன் அருகாமையில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இத்தகைய கல்குவாரிகளை இயக்க நடக்கும் முயற்சியை தடை செய்ய வேண்டும் என்றும், புதிதாக அனுமதி கோரும் இத்தகைய கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



பழனிசாமி மேலும் கூறுகையில், முதற்கட்ட நடவடிக்கையாக இதை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க உள்ளதாகவும், விதி மீறல்கள் ஏற்படும் பட்சத்தில் நீதிமன்றத்திற்கு சென்று அத்தகைய விதி மீறல்களை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பிரச்சினை தொடரும் பட்சத்தில் விவசாயிகள் வேறுவிதமான போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...