கோவை மதுக்கரையில் தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்க எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் மனு

கோவை மதுக்கரையில் தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது. குவாரிகள் மீண்டும் இயங்கினால் விவசாய குடும்பங்கள் பாதிப்படையும் என எச்சரிக்கை.


Coimbatore: கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்கும் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி அளித்த மனுவில், மதுக்கரை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 அடி ஆழம் வரை தோண்டி எடுக்கப்பட்ட கல்குவாரிகள் தடைசெய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அவற்றை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.



இந்த கல்குவாரிகள் மீண்டும் இயக்கப்பட்டால், அதன் அருகாமையில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இத்தகைய கல்குவாரிகளை இயக்க நடக்கும் முயற்சியை தடை செய்ய வேண்டும் என்றும், புதிதாக அனுமதி கோரும் இத்தகைய கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



பழனிசாமி மேலும் கூறுகையில், முதற்கட்ட நடவடிக்கையாக இதை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க உள்ளதாகவும், விதி மீறல்கள் ஏற்படும் பட்சத்தில் நீதிமன்றத்திற்கு சென்று அத்தகைய விதி மீறல்களை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பிரச்சினை தொடரும் பட்சத்தில் விவசாயிகள் வேறுவிதமான போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...