கோவை தொண்டாமுத்தூரில் யானையை விரட்டிய இளைஞர் உயிரிழப்பு

கோவை தொண்டாமுத்தூர் அருகே விராலியூரில் காட்டு யானையை விரட்டிய 24 வயது இளைஞர் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால் இந்த சோகம் நேர்ந்தது.


Coimbatore: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த விராலியூர் குடியிருப்பு பகுதிக்குள் ஜூலை 28 அன்று இரவு சுமார் 10 மணியளவில் காட்டுயானை ஒன்று நுழைந்தது. உடனடியாக பூலாம்பட்டி வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்ட முயன்றனர். யானை ஆக்ரோஷமாக சுற்றித் திரிந்ததால், அதன் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்தனர்.

எனினும், விராலியூர் இந்திரா காலனியைச் சேர்ந்த கார்த்தி (24) மற்றும் அவரது நண்பர் ஹரிஷ் (22) ஆகியோர் யானையை விரட்ட முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த யானை அவர்களை நோக்கி திரும்பியது. ஹரிஷ் தப்பி ஓடிவிட்டார். ஆனால் கார்த்தி கீழே விழுந்ததால், யானை அவரைத் தூக்கி வீசி மிதித்தது. இதில் கார்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஹரிஷும் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி யானையை விரட்டச் சென்றதால் நேர்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இன்று (ஜூலை 29) சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அவர் தனது சொந்த நிதியாக ரூ.20,000 மற்றும் தமிழக அரசின் முதல் கட்ட நிதியாக ரூ.50,000 வழங்கினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...