வார சந்தை அனுமதிக்காக காந்திமா நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை காந்திமா நகரில் 10 ஆண்டுகளாக நடந்த வார சந்தைக்கு மீண்டும் அனுமதி கோரி 300 குடும்பங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மாநகராட்சி நிர்வாகம் விளையாட்டு திடல் என்று கூறி சந்தைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாநகராட்சி 25-வது வார்டு காந்திமா நகர் பகுதியில் வார சந்தைக்கு அனுமதி அளிக்கக் கோரி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனுதாரர்கள் தெரிவித்ததாவது: "கடந்த 10 ஆண்டுகளாக வாரந்தோறும் வியாழன் மாலை வார சந்தை நடத்தி வந்தோம். தற்போது அந்தப் பகுதியை விளையாட்டு திடல் என்று கூறி மாநகராட்சி நிர்வாகத்தினர் சந்தை அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அங்கு சந்தை அமைக்க இயலாதவாறு வேலிகள் அமைத்துள்ளனர்."



"இதனால் 300 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், ஊனமுற்றவர்கள் என பலர் இந்த வார சந்தையை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். எனவே, இங்கு சந்தை நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்கி எங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்கள் இந்த மனுவை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...