வார சந்தை அனுமதிக்காக காந்திமா நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை காந்திமா நகரில் 10 ஆண்டுகளாக நடந்த வார சந்தைக்கு மீண்டும் அனுமதி கோரி 300 குடும்பங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மாநகராட்சி நிர்வாகம் விளையாட்டு திடல் என்று கூறி சந்தைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாநகராட்சி 25-வது வார்டு காந்திமா நகர் பகுதியில் வார சந்தைக்கு அனுமதி அளிக்கக் கோரி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனுதாரர்கள் தெரிவித்ததாவது: "கடந்த 10 ஆண்டுகளாக வாரந்தோறும் வியாழன் மாலை வார சந்தை நடத்தி வந்தோம். தற்போது அந்தப் பகுதியை விளையாட்டு திடல் என்று கூறி மாநகராட்சி நிர்வாகத்தினர் சந்தை அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அங்கு சந்தை அமைக்க இயலாதவாறு வேலிகள் அமைத்துள்ளனர்."



"இதனால் 300 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், ஊனமுற்றவர்கள் என பலர் இந்த வார சந்தையை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். எனவே, இங்கு சந்தை நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்கி எங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்கள் இந்த மனுவை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...