பொள்ளாச்சியில் லாரி மோதி இரு இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு

பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின் நகர் பகுதியில் நேற்று மாலை பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து நடந்த நேரத்தில், அரசு பேருந்து ஒன்று பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தது. பேருந்து நின்று கொண்டிருந்ததால், பேருந்தின் பின்புறமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பேருந்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். லாரியின் சக்கரங்கள் இருவர் மீதும் ஏறியதில் அவர்களின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



உயிரிழந்த இருவரும் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியைச் சேர்ந்த கவி பிரகாஷ் (வயது 20) மற்றும் ஜெயபிரகாஷ் (வயது 24) என்பது தெரிய வந்தது. இருவரும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்த பரிதாப விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார், விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...