கோவை குனியமுத்தூரில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

கோவையின் குனியமுத்தூரில், 35 வயதான யோகேஷ் என்ற வாலிபர் குடும்ப வறுமை காரணமாக வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Coimbatore: கோவை குனியமுத்தூரை சேர்ந்த யோகேஷ் (35) என்ற வாலிபர், குடும்ப வறுமை காரணமாக வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யோகேஷ் பிஇ பட்டதாரியாக இருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி சுகன்யா (35). இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். ஆனால், யோகேஷ் போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்த யோகேஷ், வாழ்க்கையில் விரக்தியடைந்து நேற்று முன்தினம் வீட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார்.

சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், யோகேஷை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தற்போது இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...