கோவையின் குனியமுத்தூரில், 35 வயதான யோகேஷ் என்ற வாலிபர் குடும்ப வறுமை காரணமாக வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Coimbatore: கோவை குனியமுத்தூரை சேர்ந்த யோகேஷ் (35) என்ற வாலிபர், குடும்ப வறுமை காரணமாக வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யோகேஷ் பிஇ பட்டதாரியாக இருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி சுகன்யா (35). இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். ஆனால், யோகேஷ் போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்த யோகேஷ், வாழ்க்கையில் விரக்தியடைந்து நேற்று முன்தினம் வீட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார்.
சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், யோகேஷை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தற்போது இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யோகேஷ் பிஇ பட்டதாரியாக இருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி சுகன்யா (35). இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். ஆனால், யோகேஷ் போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்த யோகேஷ், வாழ்க்கையில் விரக்தியடைந்து நேற்று முன்தினம் வீட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார்.
சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், யோகேஷை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தற்போது இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.