தாராபுரம் அருகே மூலனூரில் நடைபெற்ற முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூரில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் பந்தயத்தை துவக்கி வைத்தார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ரேக்ளா பந்தயத்தை காலை ஏழு மணி அளவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்த ரேக்ளா பந்தயம் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட ரேக்ளா மாட்டு வண்டிகள் பங்கு பெற்றன.



முதலில் நடைபெற்ற 200 மீட்டர் ரேக்ளா பந்தயத்தில் ஏராளமான காளைகள் சீறி பாய்ந்தன. 200 மற்றும் 300 மீட்டர் ரேக்ளா போட்டிகளில் வெற்றி பெற்ற ரேக்ளா பந்தய வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்வு மூலனூர் பகுதியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...