தாராபுரம் அருகே மூலனூரில் நடைபெற்ற முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூரில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் பந்தயத்தை துவக்கி வைத்தார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ரேக்ளா பந்தயத்தை காலை ஏழு மணி அளவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்த ரேக்ளா பந்தயம் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட ரேக்ளா மாட்டு வண்டிகள் பங்கு பெற்றன.



முதலில் நடைபெற்ற 200 மீட்டர் ரேக்ளா பந்தயத்தில் ஏராளமான காளைகள் சீறி பாய்ந்தன. 200 மற்றும் 300 மீட்டர் ரேக்ளா போட்டிகளில் வெற்றி பெற்ற ரேக்ளா பந்தய வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்வு மூலனூர் பகுதியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...