கோவை வழியாக கேரளா-பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

எர்ணாகுளம்-பெங்களூரு இடையே ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 26 வரை சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை. கோவை, சேலம் வழியாக செல்லும் இந்த ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும்.


கோவை: எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த சிறப்பு ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. எர்ணாகுளம்-பெங்களூரு இடையே புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படும். எர்ணாகுளத்தில் பகல் 12.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தில் மாலை 4.13-4.15 வரை நின்று செல்லும். சேலத்திற்கு மாலை 6.33க்கு சென்றடையும். பெங்களூரு கண்டோன்மென்டுக்கு இரவு 10 மணிக்கு சென்றடையும்.

திரும்பும் பயணத்தில், பெங்களூரு - எர்ணாகுளம் இடையே செவ்வாய், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டும் இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. பெங்களூரில் காலை 5.30க்கு புறப்படும் இந்த ரயில் சேலத்திற்கு காலை 8.58க்கும், ஈரோட்டிற்கு காலை 9.50க்கும், திருப்பூருக்கு 10.33க்கும், போத்தனூருக்கு 11.15க்கும் வந்து எர்ணாகுளத்திற்கு மதியம் 2.20க்கு சென்றடையும்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...