கோவை வழியாக கேரளா-பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

எர்ணாகுளம்-பெங்களூரு இடையே ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 26 வரை சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை. கோவை, சேலம் வழியாக செல்லும் இந்த ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும்.


கோவை: எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த சிறப்பு ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. எர்ணாகுளம்-பெங்களூரு இடையே புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படும். எர்ணாகுளத்தில் பகல் 12.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தில் மாலை 4.13-4.15 வரை நின்று செல்லும். சேலத்திற்கு மாலை 6.33க்கு சென்றடையும். பெங்களூரு கண்டோன்மென்டுக்கு இரவு 10 மணிக்கு சென்றடையும்.

திரும்பும் பயணத்தில், பெங்களூரு - எர்ணாகுளம் இடையே செவ்வாய், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டும் இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. பெங்களூரில் காலை 5.30க்கு புறப்படும் இந்த ரயில் சேலத்திற்கு காலை 8.58க்கும், ஈரோட்டிற்கு காலை 9.50க்கும், திருப்பூருக்கு 10.33க்கும், போத்தனூருக்கு 11.15க்கும் வந்து எர்ணாகுளத்திற்கு மதியம் 2.20க்கு சென்றடையும்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...