அமைச்சர் சு.முத்துசாமி ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கினார்

கோவை ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 26ஆம் தேதி 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி இலவச மிதிவண்டிகளை வழங்கினார். மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை திருச்சி சாலையில் உள்ள ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஜூலை 26 அன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.



இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் மா சிவகுரு பிரபாகரன், மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.), தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார், சிங்காநல்லூர் பகுதி-1 செயலாளர் எஸ்.எம்.சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தா மணி பன்னீர்செல்வம், சுமித்ரா தீபக், பகுதி துணைச் செயலாளர் கஸ்தூரி அருண், வட்டக் கழகச் செயலாளர்கள் சுரேஷ் குமார், எல்.பி.எஃப் சண்முகம், ராஜேந்திரன், தி.இளங்கோவன், நெசவாளர் அணி விஸ்வநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...