அமைச்சர் சு.முத்துசாமி ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கினார்

கோவை ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 26ஆம் தேதி 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி இலவச மிதிவண்டிகளை வழங்கினார். மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை திருச்சி சாலையில் உள்ள ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஜூலை 26 அன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.



இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் மா சிவகுரு பிரபாகரன், மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.), தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார், சிங்காநல்லூர் பகுதி-1 செயலாளர் எஸ்.எம்.சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தா மணி பன்னீர்செல்வம், சுமித்ரா தீபக், பகுதி துணைச் செயலாளர் கஸ்தூரி அருண், வட்டக் கழகச் செயலாளர்கள் சுரேஷ் குமார், எல்.பி.எஃப் சண்முகம், ராஜேந்திரன், தி.இளங்கோவன், நெசவாளர் அணி விஸ்வநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...