கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ அணைப்பு செலவு: உணவுக்கு மட்டும் ரூ.27 லட்சம் - அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீயை அணைக்க செலவிட்ட தொகையில் உணவுக்கு மட்டும் ரூ.27 லட்சம் செலவிடப்பட்டதாக அதிமுக கவுன்சிலர் குற்றம்சாட்டியுள்ளார். மொத்த செலவு ரூ.76 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க செலவிடப்பட்ட தொகை குறித்து அதிமுக கவுன்சிலர் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக அதிமுக கவுன்சிலர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், சமீபத்தில் நடந்த தீ விபத்து தொடர்பாக காட்டப்பட்டுள்ள கணக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தீப்பற்றியது. இந்த தீயை அணைக்க சுமார் 11 நாட்களில் ரூ.27,51,678 செலவு செய்துள்ளதாக மாநகராட்சி ஒப்புதல் தீர்மான நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகை உணவு, தேநீர், காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வாங்கியதற்கு மட்டுமே செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை மாநகராட்சியில் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது.



கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்துள்ள நிலையில், துணை மேயர் வெற்றி செல்வன் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 333 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அதில், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏப்ரல் 6 முதல் 17 வரை கட்டுக்கடங்காமல் தீப்பற்றியது குறித்தும், அதை அணைப்பதற்கான செலவு கணக்குகள் குறித்தும் மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானமாக கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தில், தீயை அணைப்பதற்கான மொத்த செலவு ரூ.76,70,318 என காட்டப்பட்டுள்ளது. இதில் உணவு, தேநீர், காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வாங்கியதற்கு மட்டும் ரூ.27,51,678 செலவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவு விவரம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...