கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ அணைப்பு செலவு: உணவுக்கு மட்டும் ரூ.27 லட்சம் - அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீயை அணைக்க செலவிட்ட தொகையில் உணவுக்கு மட்டும் ரூ.27 லட்சம் செலவிடப்பட்டதாக அதிமுக கவுன்சிலர் குற்றம்சாட்டியுள்ளார். மொத்த செலவு ரூ.76 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க செலவிடப்பட்ட தொகை குறித்து அதிமுக கவுன்சிலர் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக அதிமுக கவுன்சிலர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், சமீபத்தில் நடந்த தீ விபத்து தொடர்பாக காட்டப்பட்டுள்ள கணக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தீப்பற்றியது. இந்த தீயை அணைக்க சுமார் 11 நாட்களில் ரூ.27,51,678 செலவு செய்துள்ளதாக மாநகராட்சி ஒப்புதல் தீர்மான நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகை உணவு, தேநீர், காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வாங்கியதற்கு மட்டுமே செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை மாநகராட்சியில் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது.



கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்துள்ள நிலையில், துணை மேயர் வெற்றி செல்வன் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 333 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அதில், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏப்ரல் 6 முதல் 17 வரை கட்டுக்கடங்காமல் தீப்பற்றியது குறித்தும், அதை அணைப்பதற்கான செலவு கணக்குகள் குறித்தும் மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானமாக கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தில், தீயை அணைப்பதற்கான மொத்த செலவு ரூ.76,70,318 என காட்டப்பட்டுள்ளது. இதில் உணவு, தேநீர், காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வாங்கியதற்கு மட்டும் ரூ.27,51,678 செலவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவு விவரம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...