விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25ம் தேதி தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் அடைக்கப்படும்- தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கிடசுப்பு

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் ஏப்ரல் 25ம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் அடைக்கப்படும் என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கிடசுப்பு தெரிவித்துள்ளார். கோவையில் தமிழ்நாடு ஓட்டல் சங்க தலைவர் வெங்கிடசுப்பு செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதுகுறித்து கூறியதாவது:-

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் கதவடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் பங்கேற்க உள்ளது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்களும் மூடப்படும்.

மேலும், அன்றையதினம் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சார்பில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து அடையாளமாக போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 

உணவு பொருட்கள் அனைத்து இடங்களிலும் ஒரே விலையில் கிடைக்க வாய்ப்பில்லை. இருக்கும் இடம், வாடகை, ஊதியம் போன்றவற்றின் அடிப்படையில் உணவு பொருட்களின் விலை மாறும். ஆனால் அனைத்து இடங்களிலும் தரமான உணவு வழங்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு சில விதிகளை தவிர, சட்டம் வரவேற்கும் படியாகவே உள்ளது" என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கிடசுப்பு தெரிவித்தார்.

இதனிடையே விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை உக்கடம் பணிமனை முன்பாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன. விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...