GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், கலெக்டர் பவன் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) கோவை தடாகம் சாலையில் உள்ள GCT கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.




இங்கு வரும் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் பாதுகாப்பு வலுவாக பேணப்பட்டு வருகிறது.




இந்நிலையில், நேற்று இரவு கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் திடீரென்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். திடீர் ஆய்வின்போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்தார்.




அப்போது, அங்கு பணியில் இருந்த நபர்களின் அடையாள அட்டைகளை கலெக்டர் நேரில் பரிசோதனை செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்த பின்னர், கலெக்டர் அங்கிருந்து வெளியேறினார்.




வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை இத்தகைய திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...