திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.


Tirupur: மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டி இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவராக தமீமுன் அன்சாரி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் என்பவர் சமூக வலைதளங்களில் தமீமுன் அன்சாரி மீது அவதூறுகளை பதிவு செய்து கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.



இதையடுத்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் பலர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவில், தடா ரஹீம் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும் என்றும், கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் விதமாக பதிவிட்ட தடா ரஹீம் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...