திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.


Tirupur: மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டி இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவராக தமீமுன் அன்சாரி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் என்பவர் சமூக வலைதளங்களில் தமீமுன் அன்சாரி மீது அவதூறுகளை பதிவு செய்து கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.



இதையடுத்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் பலர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவில், தடா ரஹீம் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும் என்றும், கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் விதமாக பதிவிட்ட தடா ரஹீம் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...