டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போதிய ஊழியர் நியமனம், EBC ஸ்டிக்கர் முறைகேடு, மண்டல மேலாளர் நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டனர்.


Coimbatore: கோவை பீளமேடு பகுதியில் உள்ள மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது. காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.



டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் பல மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு நடத்தும் மதுபான கடைகளில் போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும், கடைகளில் கூடுதல் இடவசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், மது பாட்டில்களில் EBC ஸ்டிக்கர் 100 சதவீதம் ஒட்டி அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் முறையை சீர் செய்து அவுட்சோர்சிங் முறையில் அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யும் நடைமுறையை அப்டேட் செய்து மூன்று முறை ஸ்கேன் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று கோவை பீளமேடு பகுதியில் உள்ள மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், அலுவலகத்திற்குள் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும், மண்டல மேலாளர் Govindarasu மிகவும் அதிகாரத் தோணியில் நடந்து கொள்வதாகக் கூறி எதிர்ப்பை பதிவு செய்தனர். மண்டல மேலாளர் Govindaraj அதிகாரத் தொணியில் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள், அவருக்கு எதிராகவும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியதை அடுத்து, காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தொழிற்சங்கத்தினர் தங்களது போராட்டம் வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...