டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போதிய ஊழியர் நியமனம், EBC ஸ்டிக்கர் முறைகேடு, மண்டல மேலாளர் நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டனர்.


Coimbatore: கோவை பீளமேடு பகுதியில் உள்ள மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது. காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.



டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் பல மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு நடத்தும் மதுபான கடைகளில் போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும், கடைகளில் கூடுதல் இடவசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், மது பாட்டில்களில் EBC ஸ்டிக்கர் 100 சதவீதம் ஒட்டி அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் முறையை சீர் செய்து அவுட்சோர்சிங் முறையில் அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யும் நடைமுறையை அப்டேட் செய்து மூன்று முறை ஸ்கேன் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று கோவை பீளமேடு பகுதியில் உள்ள மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், அலுவலகத்திற்குள் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும், மண்டல மேலாளர் Govindarasu மிகவும் அதிகாரத் தோணியில் நடந்து கொள்வதாகக் கூறி எதிர்ப்பை பதிவு செய்தனர். மண்டல மேலாளர் Govindaraj அதிகாரத் தொணியில் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள், அவருக்கு எதிராகவும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியதை அடுத்து, காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தொழிற்சங்கத்தினர் தங்களது போராட்டம் வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...