பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது சமூக ஊடகங்களில் அவதூறு: குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய இருவருக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் சிறை தண்டனையும் தலா ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதி பாஜக எம்எல்ஏவும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் மதுரையைச் சேர்ந்த சங்கர நாராயணன் ஆகியோர் வானதி சீனிவாசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறான செய்திகளை பதிவிட்டனர். இது தொடர்பாக வானதி சீனிவாசன் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

7 ஆண்டுகள் கழித்து இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றவாளிகள் இருவருக்கும் ஒரு நாள் சிறை தண்டனையும், தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், "சமூக வலைதளங்களை பயன்படுத்தி பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களை களங்கப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கிற்காக 7 ஆண்டுகள் நீதிமன்றத்தில் வாதாடிய உதவி வழக்கறிஞர்களுக்கும், தன்னுடன் துணை நின்ற கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தத் தீர்ப்பானது சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை பதிவிடுவோருக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...