பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது சமூக ஊடகங்களில் அவதூறு: குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய இருவருக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் சிறை தண்டனையும் தலா ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதி பாஜக எம்எல்ஏவும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் மதுரையைச் சேர்ந்த சங்கர நாராயணன் ஆகியோர் வானதி சீனிவாசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறான செய்திகளை பதிவிட்டனர். இது தொடர்பாக வானதி சீனிவாசன் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

7 ஆண்டுகள் கழித்து இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றவாளிகள் இருவருக்கும் ஒரு நாள் சிறை தண்டனையும், தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், "சமூக வலைதளங்களை பயன்படுத்தி பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களை களங்கப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கிற்காக 7 ஆண்டுகள் நீதிமன்றத்தில் வாதாடிய உதவி வழக்கறிஞர்களுக்கும், தன்னுடன் துணை நின்ற கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தத் தீர்ப்பானது சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை பதிவிடுவோருக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...