கோவையில் குற்றவியல் சட்ட மாற்றத்திற்கு எதிர்ப்பு: தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் பகுதியில் மத்திய தொழிற்சங்கங்கள் குற்றவியல் சட்ட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிலாளர் நலன்களை பாதுகாக்க பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.


கோவை: கோவையில் குற்றவியல் சட்ட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் பகுதியில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ஜூலை 24 அன்று நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அவற்றில் முக்கியமானவை:

1. 17-வது நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

2. 44 தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தியதை திரும்பப் பெற வேண்டும்.

3. தொழிலாளர் நலன்களைப் பாதுகாத்திட தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஒன்றிய பட்ஜெட்டில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

4. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள், மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரித்தனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...