சூலூர் பகுதியில் 460 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது

கோவை மாவட்டம் சூலூரில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறையினர் 460 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்து, இரண்டு நபர்களைக் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கத்துடன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சூலூர் பகுதியில் பெரும் அளவிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

24.07.2024 அன்று, சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சூலூர் காவல் நிலைய அதிகாரிகள் பாப்பம்பட்டி அருகே சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் சிவசுப்பிரமணியம் மற்றும் தங்கப்பாண்டி மகன் முருகராஜ் ஆகியோர் ஒரு வாடகை வீட்டில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

கைதான நபர்களிடமிருந்து மொத்தம் 460 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூபாய் 3,03,169/- என மதிப்பிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...