சூலூரில் சர்க்கார் புறம்போக்கு நிலத்தில் வேலி அமைக்க கோரிக்கை: ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு

சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சர்க்கார் புறம்போக்கு நிலத்தில் வேலி அமைக்க கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு அளித்துள்ளது. 9 மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டம் நடத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் வட்டத்தில் உள்ள சர்க்கார் புறம்போக்கு நிலத்தில் வேலி அமைக்க கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகே உள்ள சூலூர் கிராம புலா எண். 704/5 (பழைய புல எண். 422/15) நெகாலை 400 சதுர மீட்டர் (10 சென்ட்) சர்க்கார் புறம்போக்கு நத்தம் இடத்தில் வேலி அமைக்க மாவட்ட நிர்வாகமும், வருவாய் கோட்டாட்சியர் தெற்கு அவர்களும் கடந்த 18.10.2023 அன்று உத்தரவிட்டனர்.



ஆனால், 9 மாதங்கள் கடந்தும் இந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக சூலூர் பேரூராட்சி செயல் அலுவலரை நேரில் சந்தித்து, சர்ச்சைக்குரிய இடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமலும், வாகனங்களை நிறுத்தாமலும், கடைகளை அமைக்காமலும் இருக்க உடனடியாக வேலி அமைக்க வேண்டும் என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மேலும், வேலி அமைக்கும் போது பாதுகாப்பு வழங்கி ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரி காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் லோட்டஸ் மணிகண்டன் அளித்துள்ளார்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...