கெம்மநாயக்கன்பாளையம் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வடமாநிலத்தவர் கைது

கோவை அன்னூர் காவல்துறையினர் கெம்மநாயக்கன்பாளையம் அருகே வாகன சோதனையின் போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய காவல்துறையினர் கெம்மநாயக்கன்பாளையம் அருகே இன்று (ஜூலை 23) வாகன சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகாதேவ் சௌத்ரி என்பவரது மகன் ரவிசங்கர் சவுத்ரி (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காவல்துறையினர் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட ரவிசங்கர் சவுத்ரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...